Effective Volunteer Recognition
தன்னார்வச் சேவை எமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்திக்குப் பெரும் பங்களிப்பைச் செய்கின்றது. தன்னார்வச் சேவைகளில் கணிசமான பகுதி தனித்தனித் தன்னார்வத் தொண்டர்களின் முயற்சிகளினாலேயே நிறைவேற்றப்படுகின்றது. சமுதாய நலனுக்காக தன்னலம் கருதாமல் உழைக்கும் அநேகமான சமூகத் தொண்டர்கள் இலங்கையில் இருக்கிறார்கள். இவர்களை அந்தந்தச் சமூகத்தின் “புகழப்படாத ஹீரோக்கள்” என்றுகூட சொல்லலாம். தன்னார்வச் சேவையை ஊக்குவிப்பதற்கும் தூண்டுவதற்கும் அத்தகைய தொண்டர்களின் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டுவது அவசியமாகும். எனவே, தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களை மதித்துப் பாராட்டுவதற்கு கிரமமான ஓர் ஒழுங்குமுறை தேசிய செயற்றிட்டத்தில் சேர்க்கப்படுவது மிக முக்கியமாகும்.